பெருமாள் - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
 
 பிராட்டி -   ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி 
 
 தாயார் -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
 
 நம்பெருமாள்* -   ஸ்ரீரங்க கோவில் உற்சவர்
 
 பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர்
 
 பெரியபிராட்டி* -   ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி) 
 
 தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் 
 
 உற்சவர்* -  கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி 
 
 மூலவர்* -  கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி 
 
 செல்வர்* -   உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி) 
 
 யாகபேரர்* -  பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. 
 
கோயிலொழுகு* -  கோவிலின் வரலாறு 
 
கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை. 
 
வீற்றிருந்த* *திருக்கோலம்* -  அமர்ந்து எழுந்தருளும் சேவை. 
 
நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.        
 
ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்
 
பெரியஉடையார்* -ஜடாயு 
 
இளையபெருமாள்* -  இலக்குவன்/லக்ஷ்மணன் 
 
எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன் 
 
இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன் 
 
யதிராசர்* -  இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 
 
யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 
 
ஸ்வாமி* -  முதலாளி
 
ஆழ்வான்* - கூரத்தாழ்வான் 
 
ஆண்டான்* -   முதலியாண்டான் 
 
லோகாச்சார்யர்* -   நம்பிள்ளையின் மற்றொரு பெயர் 
 
 பட்டர்* -   பராச‌ர பட்டர் 
 
 நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி) 
 
 வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன் 
 
 ஜீயர்* - ஸன்யாசி
 
 பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் -  மணவாள மாமுனிகள் 
 
வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார் 
 
 சடாரி* (ஸ்ரீ சடகோபம்) -   எம்பெருமானாரின் பாத கமலங்கள் 
 
 ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 
 
 மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 
 
 முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள் 
 
 அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள் 
 
 பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள் 
 
 அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர் 
 
 தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை 
 
 அடியேன்* -  தன்னை கூறிக்கொள்ளும் முறை 
 
 அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை 
 
 தாஸன்* - அடிமை, அடியேன் 
 
 ஆசார்யர்* -  குரு, ஆசான் 
 
 பூர்வாசார்யர்* -  ஆசாரியரின் முன்னோடிகள் 
 
 பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர்
 
 திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள் 
 
 உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்) 
 
 ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் 
 
 க்ரந்தம்* -  புத்தகம் 
 
 வ்யக்யானம்* - விளக்கம் 
 
 காலக்ஷேபம்* -  க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு 
 
 உபன்யாசம்* - சொற்பொழிவு 
 
 உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள் 
 
 நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு 
 
 லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள் 
 
 விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி 
 
 விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள் 
 
 சேஷி* - தலைவன் 
 
 சேஷன்* - தொண்டன் 
 
 சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு 
 
 பார‌த‌ந்த்ரிய‌ம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல் 
 
 அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல் 
 
 தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள் 
 
 பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள் 
 
 பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன 
 
 பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல் 
 
நோவு சாற்றிக்கொள்ளுதல் -  ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை 
 
 கண்வளருதல்* - உற‌க்க நிலை 
 
 கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) 
 
 எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல் 
 
 புறப்பாடுகண்டருளல்* - திரு உலா 
 
 குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல் 
 
 திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல் 
 
 நீராட்டம்* - குளித்தல் 
 
 போனகம்* - உணவு 
 
 ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்   
 
 காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார் 
 
 காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார் 
 
 சாதித்து* அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல் 
 
 நாயந்தே* - அடியேன் 
 
 திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல் 
 
 திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம் 
 
 அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)     
 
 ப்ரஸாதம்* - அன்னம் 
 
 குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார் 
 
 சாற்றமுது* - ரசம் 
 
 கரியமுது* - காய்கரி/பொரியல் 
 
 திருக்கண்ணமுது* - பாயசம் 
 
 தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம் 
 
 புளியோதரை* - புளி சாதம் 
 
 அக்காரஅடிசில்* - சர்க்கரையால் செய்த சாதம்...

#mahavishnuinfo