பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும்,சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம். அதன் பொருள் என்ன...ஏன் செய்கிறோம், அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணிப் பார்த்திருப்போமா....?

அப்படியான ஒரு விஷயம் தான்,பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவையும். பகாவனை கண்குளிர சேவித்துதீபாரதனை முடித்து ,துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது. சடாரி என்பது என்ன.. அது ஏன்  நம் தலை மீது வைக்கப்படுகிறது?  அதன் தாத்பரியம் என்ன? நாம் வழிபடும் ஒரு பொருளின் மகத்துவத்தைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

அடுத்த முறை வைணவக் கோயில்களுக்கு போகும் போது,தலையில் சாற்றப்படும் சடாரி என்ற மகுடத்தின் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதை கவனித்துப் பாருங்கள். திருமுடியின் மேல் திருவடி இருப்பதை பார்க்க முடியும்.இதற்குப் பின்னால் இருக்கும் புராணக் கதையை தெரிந்துக் கொள்வோம்.

ஒருமுறைவைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம். தன்னுடைய சங்குசக்கரம்திருமுடி ஆகியவற்றை எடுத்துஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின்  குரல் கேட்டுபாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன்வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும்சக்கரமும்கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால்அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை.சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, "கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில்தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன."இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள்.

பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும்சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.

உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்றுகோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள்கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன்

"நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான்.ஆனால்கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிரஉங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன .

 

கிரீடத்துடன்சங்கும்சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால்தனித்து நின்ற பாதுகைகளால்ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ளமுடியாமல்,பகவானிடம் முறையிட காத்து நின்றன.பகவானும் வந்தார். அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல்கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டுபுனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போதுசக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன்சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்துசங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.

 

சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய 'நான்என்ற ஆணவம்அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.