(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர்: ஜெயலெக்ஷிமிகோபாலன். திருவல்லிக்கேணி சென்னை.

நான் என்கணவர்,என் இரண்டு பிள்ளைகள் ரொம்ப நாள்களாக திருப்பதி போகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. திடீரென்று எங்களுக்கு போகும் வாய்ப்பு கிட்டியது வருடம்(1982-83) இருக்கும் அப்பொழுதெல்லாம் கம்யூட்டர்,ஸ்கேன் கிடையாது நாங்கள் திருப்பதி கிளம்பி அங்கு‌ ரூம் எடுத்து தங்கினோம்‌ இறங்கியவுடன் என் மாமியாருக்கு குளிர் சுரம் மாதிரி வந்துவிட்டது அதை பொருட்படுத்தாமல் பெருமாள் தர்ஸனம் செய்வதற்கு கோவிலுக்கு சென்று விட்டொம்.பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாள் தர்ஸனம் செய்தோம் ஜருகண்டி, ஜருகண்டி என்று சொல்லி ஒரு நிமிடம் தான் பார்த்தோம்.எனக்கு பெருமாளை சரியாக பார்க்க முடியவில்லை . வெளியில் வந்தவுடன் என் மாமியாரை ரூமில் விட்டு விட்டு படுக்கவைத்து திரும்ப பெருமாளை பார்க்கலாம் என்று வந்தோம் நான் என் கணவரிடம் பெருமாளை சரியாக பார்க்க வில்லை என்று சொல்லிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன். நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் கற்பூரம் விற்று கொண்டிருந்தவர் நாங்கள் பேசுவதைப் கேட்டு சார்... பெருமாள் free ஆக இருக்கிறார். போய் பாருங்கள் என்று சொன்னவுடன் பெருமாளே எங்களை கூப்பிடும்படியாக தோன்றியது. 
வா  வா உடனே ரூமிற்கு சென்று என் மாமியாரையும் அழைத்துக்கொண்டு பெருமாள் தர்ஸனம் பண்ணபோனோம்.

அப்பாடீ!! என்ன ஏகாந்ததர்ஸனம்! என் மனதில் நான் நினைத்ததை பெருமாள் தெரிந்து கொண்டு அழைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த அனுபவத்தை (34வருடம்) என்னால் மறக்க வே முடியாது.இந்த நிகழ்ச்சி அடிக்கடி தோன்றி ஞாபகம் வரும் கோவிந்தன் இருக்க குறையொன்றுமில்லை.

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் 
9500074173