(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர்
அடியேன் சத்யநாராயண ராமானுஜ தாஸன்,கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

அனைவரது வாழ்விலும் ஸ்ரீமந் நாராயணன் தம் கருணை இல்லாமல் இருக்காது. அடியேனுக்கு அவர் என்னுடனிருந்து எனக்கு ஆத்மார்த்தமான சத்விஷயங்களை தந்தருளியதை பறை சாற்றிக் கொள்ள வேண்டாம் என எண்ணினேன்.

ஆனால் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் தம் காலக்ஷேபத்தில், இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளவதால் அனைவருக்கும் தன்னம்பிக்கை உருவாகும் என்ற கூற்றால் தற்போது பகிர்ந்து கொள்ள தங்களுடன் இணைக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஸ்ரீஹரி தம் கருணை எண்ணிலடங்காதவை. ஒவ்வொன்றாக தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு திருமணம் ஆன  நூறு நாட்களில் என் திருத்தகப்பனார் ஆச்சாரியார் தம் திருவடிகளை அடைந்தார். அது சமயம் அடியேனுக்கு வயது இருபத்தி ஒன்று. அது நாள் முதல் பரந்தாமன் என்னுடன் இருக்கிறார் என்பதை உணர ஆரம்பித்தேன். எனக்கு ஒரு விபத்தில் இரண்டு கால்களும், வலது கையும் அடிபட்டு முப்பத்து ஆறு நாட்கள் எண்ணெய் கட்டு போட்டு சரிசெய்யப்பட்டது‌.

அப்போது எனது தாயார், நான் பிறந்த உடன் சோளிங்கர் நரசிம்ம பெருமாளை மங்களாசாசனம் செய்ய அழைத்து வருவதாகஒரு பிரார்த்தனை செய்து இருந்ததாகத் தெரிவித்தார்.

கட்டுகள் பிரித்து ஒரு மாதம் கழித்து என் மனைவியுடன் சன்னதிக்குப் புறப்பட்டேன். என் தாயார் மிகவும் பயந்தார். சிறிது காலம் கழித்து செல்லலாம் என்று கூறினார்.

அடியேன் அவரிடம் பெருமாளே எனக்கு மலை ஏறும் போது பாதுகாப்பாக வருவார் என்று கூறி விட்டு, தாயாரின் ஆசிகளுடன் புறப்பட்டேன்.

அடியேன் கூறியது போலவே உற்சவ நரசிம்மர் அடியேன் பின்னாலேயே வந்தது, ஆயிரம் படிகளை கடந்த பிறகு தான் தெரிந்தது. அப்போது தான், பெருமாளுக்கு வழி விடுங்கள் என்று சத்தம் கேட்டது. நரசிம்மர் அங்கு இருந்து முன் சென்று அலங்காரத்துடன் ஸேவை சாதித்தார். மனதார இறைவனை நம்பினால் கண்டிப்பாக நம்முடன் இருப்பார் என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173