ஆதி சங்கரர் அருளிய ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம்

1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :
வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !
ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

2.தடித்வாஸஸம் நீலமேகாவபாஸம்
ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

மின்னலொத்த வஸ்திரம் தரித்தவரும், நீலமேகம் போன்று விளங்குபவரும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவரும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுடரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்
நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !
விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே
ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !
சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவரும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.

5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்
லஸத்குண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !
ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.

6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்
ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !
த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.

7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !
கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்
பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !
ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே
படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !
பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!

புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் கடந்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.

பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.