ஸ்ரீனிவாசன் பத்மாவதி சந்திப்பு - பூர்வ ஜென்ம நினைவு திரும்புதல்

ஸ்ரீனிவாசன் யானையை துரத்தி வெகு தொலைவில் வந்ததால் , பத்மாவதி அன்னையின் அரண்மனை அந்தப்புரத்தில் அருகில் இருந்த நந்தவனது மரநிழலில் அசதியாக இருந்ததினால் அப்படியே படுத்துக் கொண்டு இளைப்பாறினார். அப்போது அந்த இடத்துக்கு பத்மாவதி தனது தோழிகளுடன் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வந்தாள்.

ஆடிப்பாடிக் கொண்டு வந்தவளைக் கண்டதுமே ஸ்ரீனிவாசருக்கு அவள் மீது தன்னை அறியாமலேயே காதல் பிறந்தது. எத்தனைப் பேரழகியாக இருக்கிறாள், இவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணினார். அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவரை பத்மாவதியும் நோக்கினாள். யாரது அரண்மனைத் தோட்டத்தில் வந்து அமர்ந்து உள்ளார் என்பதைப் பார்ப்பதற்காக தனது தோழிகளுடன் அவர் அருகில் சென்றதும் அவர் வேற்று மனிதர் என்பது புரிந்தது. அவள் அவரிடம் கேட்டாள் ‘ஐயா, நீங்கள் யார்? இங்கு எப்படி வந்தீர்கள்? இது அரண்மனை தோட்டம் ஆயிற்றே’ என்று கேட்க அவர் எழுந்து நின்று கொண்டு தான் சேஷாசலம் என்ற ஊரில் இருந்து வருவதாகவும் ஒரு மதம் பிடித்த யானையை துரத்திக் கொண்டு தனது குதிரையில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த யானை அந்த இடத்தில் வந்தப் பின் எங்கோ மறைந்து ஓடி விட்டது. வேண்டும் என்றே தான் அங்கு வரவில்லை. ஆனால் வழி தவறி வந்து விட்டாலும், தாகமாக இருந்ததினால் அந்த தாடகத்தில் இருந்து தண்ணீரைக் குடித்தப் பின் இளைப்பாறிக் கொண்டு இருந்ததாகவும், அப்போதுதான் பேரழகு மிக்க அவளைக் கண்டதாகவும் , அவள் யார் என்றும் கேட்டார்.

ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டு வந்த பெண்களை வேடன் உருவில் இருந்த ஸ்ரீனிவாசன் பார்த்தார் அதைக் கேட்ட அவள் கூறினாள் ‘ ஐயா, தவறாக வந்ததுதான் வந்து விட்டீர்கள். ஆனால் வந்ததும் இல்லாமல் என் அழகைக் குறித்து விளக்குவது நியாயமல்ல. ஒரு பெண்ணைப் பார்த்து முதல் எடுப்பிலேயே அவள் அழகை விமர்சிப்பதா? நான் யார் என்பதை அறியாமல் இப்படிக் கேட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். என் தந்தை இந்த நாட்டு மன்னனான ஆகாசராஜன் என்பவர். நான் அவருடையப் பெண்ணான பத்மாவதி ….ஆகவே உடனே இங்கிருந்து கிளம்பி ஓடி விடுங்கள்’ என்றாள் .

ஆனால் அவரோ விடாக் கொண்டன், கொடாக் கண்டன் என்பதினால் கேட்டார், ‘அழகு வதனியே, உன்னைக் கண்டதுமே என்னை அறியாமல் உன் மீது மோகம் வந்து விட்டது. நான் என்ன செய்வேன்? தவறாக எண்ணாதே. நான் வேடன் ஆனாலும் உன்னை மணந்து கொண்டு உன்னை தக்க பாதுகாப்போடு வைத்திருப்பேன். என்னை மணக்க நீ சம்மதிப்பாயா?’ என்று எடுத்த எடுப்பிலேயே தன் மனதில் இருந்த எண்ணத்தை கூறி விட்டார்.

அதைக் கேட்ட பத்மாவதி நாகமாக சீறினாள் ‘அற்பப் பதரே….நீ என்ன பைத்தியமா?. …என்ன ஆணவம் இருந்தால் வேடனான நீ ராஜகுமாரியான என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்பாய். உன்னைப் போன்றவர்களுக்கு பாபம் பரிதாபப்படுவது தவறு. இங்கிருந்து ஓடுகிறாயா, இல்லை சேவகர்களை அழைத்துத் துரத்தட்டுமா என?’ எனக் கோபமாகக் கேட்டு விட்டு சேவகர்களை கூவி அழைத்தாள்.

அவர்கள் வருவதற்கு முன்னரே ‘ அழகிய பெண்ணே, தயவு செய்து என் காதலை நிராகரித்துவிடாதே….. நான் உன்னை நெஞ்சார நேசிக்கிறேன். என்னை தயவு செய்து மணந்து கொண்டு என் காதல் ஏகத்தை நீக்கு’ என்று மன்றாடத் துவங்க, அவர் மீது தோழிகள் கற்களை வீசி அடிக்கத் துவங்கினார்கள். அப்படி கற்களை வீசியபோது அவர் வெண் குதிரை மீது தகாத இடத்தில் பெரிய பெரிய கற்கள் வீழ்ந்ததினால் அந்த குதிரையும் அங்கேயே மரணம் அடைந்து விழுந்தது. அதற்குள் அங்கு ஓடி வந்த காவலாளிகள் அவரை அடித்து உதைத்து அனுப்பினார்கள். அவர்கள் அடித்ததில் உடலெல்லாம் படுகாயமுற்று ரத்தம் வழிந்த உடலுடன் அவர் மெல்ல தள்ளாடிக் கொண்டு அரண்மனை தோட்டத்தை விட்டு வெளியேறினார்.

உடம்பெல்லாம் ரத்தம் வழிய வந்த தனது மகனை பார்த்து பதறியபடி ஓடி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றாள் வகுளாதேவி உடம்பெல்லாம் ரத்தம் வழிய வந்த தனது மகனை ஓடி வந்து அணைத்துக் கொண்டு பதறியபடி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள் வகுளாதேவி. ‘ என் மைந்தனே…உனக்கு என்ன ஆயிற்று? உடலெல்லாம் அடிபட்டு ரத்தக் காயமாகி உள்ளது….என்ன ஆயிற்று மகனே?…என்ன ஆயிற்று?..’ .என பதறிக் கேட்டாள். அதைக் கேட்ட ஸ்ரீனிவாசர் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினார்.

அவர் உடல் காயங்களுக்கு மருந்துகளை போட்டவாறே, அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வகுளாதேவி கூறினாள் ‘ மகனே உன் மனது எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் எங்கே, அந்தப் பெண் எங்கே? அவள் ஒரு ராஜகுமாரி. நாமோ ஏழை வேடுவர்கள். ஆகவே எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு இப்படி உடலை புண்படுத்திக் கொண்டு வருவது முறையா? தயவு செய்து நான் கூறுவதைக் கேள். அவளை மறந்து விடு. உனக்கு நமது தகுதிக்கு ஏற்றப் பெண்ணை நானே திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று பலவாறாக அவருக்கு அறிவுரை செய்தாள்.

அப்போது மீண்டும் அவருக்கு தனது உண்மை அவதாரம் மனதில் வந்தது. நாடகத்துக்கு ஏற்பவே அவருடைய அவதார நினைவு அவ்வப்போது அவருக்கு வந்து கொண்டு அவரை வழி நடத்திச் செல்லும் என்பது விதி. ஆகவீதான் இந்த தருமனத்திலும் அவர் நினைவு அவருக்கு வந்தது. இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து அதிக நாள் மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே வைத்திருக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்தார். ஏற்கனவே அவளிடம் வந்து சேர்ந்தபோது தான் யார் என்பதையும் அவர்களுடைய பூர்வ ஜென்மக் கதையையும் அவள் நினைவில் கொண்டு வந்தப் பின், அவற்றை அவள் நினைவில் இருந்து மறக்கடித்து வைத்து இருந்தார். ஆனால் இப்போது அதை மீண்டும் வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார்.

இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே வைத்திருக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தார். தன் தாயாரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவர் பார்த்தப் பார்வையில் அவளுக்கு பழைய நினைவுகள் மீண்டும் தோன்றின. அவர் கூறத் துவங்கினார் ‘ அம்மா, நான் இந்தப் பிறவியில் ஸ்ரீனிவாசனாக மனித உருவில் அவதரித்து உள்ளதினால், அந்த உடலுக்கான சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதுவே நியதி. நான் விஷ்ணுவாக இருந்தால் என்ன? இப்போது அந்த உடலில் நான் இல்லை என்பதினால் இந்த மனித உடலுக்கான சில கடமைகளை செய்யவே வந்துள்ளேன். உனக்கு முன் ஜென்மத்தில் கொடுத்த வாக்கின்படி உன்னையும் இந்தப் பிறவியில் என்னோடு என் தாயாராக இணைத்துக் கொண்டு விட்டேன். நான் கிருஷ்ணராக இருந்தபோது நடந்தக் கதை மட்டும்தானே உனக்கு இதுவரை தெரியும். இப்போது நான் ராமனாக அவதரித்து இருந்தபோது நடந்த சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். அதையும் இப்போது கேள்.

வகுளாதைவியின் பூர்வ ஜென்மம்

விஷ்ணு தனது பூர்வ ஜென்மக் கதையை வகுளா தேவிக்கு நினைவு கூர்ந்தார் நான் ராமனாக இருந்தபோது சீதையை மணம் செய்து கொண்டு சந்தப்பவசத்தினால் வனவாசம் சென்றேன். அப்போது ராவணன் சூழ்ச்சி செய்து என் மனைவியான சீதையைக் கவர்ந்து செல்ல ஏற்பாடு செய்தபோது அந்த நிலையில் இருந்து சீதையைக் காப்பாற்ற அக்னி பகவான் ஒரு மாய சீதையை உருவாக்கி ராவணனை ஏமாற்றி அவளைக் கடத்தச் செய்தார். அந்த ராவணனுடன் யுத்தம் செய்து சீதையை நான் மீட்டுக் கொண்டு வந்தப் பின் அவளை அக்னி பிரவேசத்துக்கு உட்படுத்தி கற்பை சோதித்தபோது, தீயில் இருந்து சீதையும், மாய சீதையாக இருந்த வேதவதி எனும் பெண்ணும் வெளி வந்தார்கள். வேதவதி வேறு யாருமல்ல. அவளும் லஷ்மியின் ஒரு அம்சம்தான். அக்னியில் வெளி வந்த வேதவதி ராமர் உருவில் இருந்த விஷ்ணுவான என்னை மணக்க விரும்பினாள். ஆனால் அந்த ராமாவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டு இருந்ததினால் அவளை அடைய முடியாமல் போயிற்று. ஆகவே உனக்கு கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தது போல வேதவதிக்கு ராமாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தேன். அதன்படி நான் ஸ்ரீனிவாசராக அவதரிக்கும்போது அவளையும் மானிடப் பிறவியில் அவதரிக்க வைத்து அவளை மணப்பதாக வாக்கு தந்தேன்.

அதன்படி அவளே பத்மாவதியாக அவதரித்து இருக்கிறாள். ஆகவே நான் அவளை எப்படியாவது மணந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால் சில காரணங்களுக்காக நான் யார் என்பதையோ, அவள் யார் என்பதையோ இப்போது வெளியில் கூறக் கூடாது. நாங்கள் அவதரித்து உள்ள இந்த மனித உடல் சில வேதனைகளை அனுபவித்தால்தான் நாங்கள் முன்னர் பெற்றிருந்த சாபம் இந்த உடல்களோடு அழியும். இல்லை என்றால் அது மீண்டும் அடுத்த அவதாரத்திலும் எங்களை தொடர்ந்து கொண்டு இருக்கும். ஆகவே நீதான் இந்த விஷயத்தை இரகசியமாகவே வைத்திருந்து, நான் இந்த மனித உடலில் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த உண்மைகள் எப்போது வெளிப்பட வேண்டுமோ அப்போது நானே இந்த உலகுக்கு வெளிப்படுத்துவேன். அதை மீறி நீ யாரிடமாவது இதைக் கூறி விட்டால், எங்கள் திருமணம் நடைபெறாது என்பது மட்டும் அல்ல, எங்கள் அவதாரமும் இந்த யுகத்தில் முடிந்து விடும். மீண்டும் பல யுகங்கள் நாங்கள் மீண்டும் மணந்து கொள்வதற்குக் காத்திருக்க வேண்டும்’ என்றார்.

அதைக் கேட்ட வகுளா தேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ‘மகனே, உனக்கு என்னால் இந்த அவதாரத்தில் எந்த கஷ்டமும் நேராது. என்னால் இந்த தேவ ரகசியம் யாருக்கும் வெளிப்படாது. மாறாக உனக்கு எத்தனை உதவிகள் செய்து இந்த திருமணம் நடைபெற வேண்டுமோ அதற்கான வழி முறைகளை செய்வேன் என உன் மீதே சத்தியம் இட்டுக் கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு உறங்கச் சென்றாள். அன்று இரவு முழுவதும் ஸ்ரீனிவாசருக்கு உடல் உபாதையும், மன உபாதையும் குறையவே இல்லை. மனித உருவில் இருந்ததினால் தன்னை மறந்து ‘ராஜகுமாரி, ராஜகுமாரி’ என்று முனகியவாறே படுத்திருந்தார். மறுநாள் முதல் அவரால் வேட்டைக்கும் போக முடியாமல் சோகம் அவரை சூழ்ந்திருந்தது.

பத்மாவதி காதலுறுதல்

பத்மாவதியின் கனவில் அந்த வேடன் ஓடிய காட்சி மீண்டும் மீண்டும் தோன்றியது இது இங்கே இப்படி இருந்தது என்றால், அங்கு அரண்மனையிலோ, ஸ்ரீனிவாசரை துரத்தி அடித்த பத்மாவதியும் உறக்கம் இல்லாமல் தவித்தாள். அவளை மீறி வேடரான ஸ்ரீனிவாசரின் முகம் அவள் முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டியது. அவரை சேவகர்கள் அடித்து உதைத்து துரத்திய சம்பவம் மனதை குடைந்தது. தன்னால்தானே அவருக்கு அத்தனை ரத்த காயமும் நேரிட்டது என்று மனம் வேதனைப்பட்டது. அவள் மனதில் நீங்காத வருத்தம் சூழ்ந்தது. தினமும் அந்த தாடகத்தின் அருகில் சென்று அவர் அமர்ந்திருந்த இடத்தில் சென்று நின்று கொண்டு மெளனமாக கண்ணீர் விட்டு அழுது விட்டு திரும்புவாள். ஆனால் அவள் மன நிலை அவளது தோழிகளுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அவள் சரிவர சாப்பிடவில்லை, சரிவர உறங்கவில்லை. கேளிக்கைகளிலும், உல்லாசங்களிலும் ஆர்வமும் காட்டவில்லை. எதையோ பறி கொடுத்து விட்டவளைப் போல தனிமையில் அமர்ந்திருந்தபடி யோசனையில் ஆழ்ந்து இருந்தாள் .