பெரும்பாலும் நம் மனம் மனச்சோர்வடைந்து அல்லது அமைதியற்ற நிலையில் இருக்கும்போது, நாம் கடவுளை நினைவில் கொள்கிறோம் அல்லது கோயிலுக்கு செல்ல முயற்சிக்கிறோம். 

கடவுளை வணங்கும் போதோ அல்லது கோயிலுக்குச் செல்லும் போதோ, ஒரு விதமான மன அமைதியை நாம் உணர்கிறோம். அதனால்தான் சிலர் பெரும்பாலும் கோவிலுக்குச் செல்ல விரும்புகிறார்கள். 

உங்களுக்கு பிடித்த கடவுளை நீங்கள் வணங்கும் போது, எப்போதாவது உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரும். இதன் பொருள் என்ன என்பதை அறியலாம்.

கடவுளின் வழிபாட்டின் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், கடவுளின் தெய்வீக சக்தி, ஏதோ ஒரு குறிப்பை தருகிறது என்று அர்த்தம். கடவுள் உங்களுக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கிறது என்று பொருள்.. நீங்கள் அவற்றைப் புரிந்து கொண்டால், உங்கள் பிரச்சினைகள் நீங்கிவிடும் என்றும், உங்கள் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாம்..

மேலும் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் உங்கள் வழிபாடு வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று பொருள். இப்போது உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.