ஆழ்வார்கள் பன்னிருவர் (12), அவர்கள் அருளிய பிரபந்தங்கள் 24. இவை தவிர, இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து திவ்யப்ரபந்தங்களின் மொத்த எண்ணிக்கை 4000.
4000 திவ்யப்ப்ரபந்தங்கள், நாதமுனிகள் என்ற ஆசாரியரால், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
முதலாயிரம் | திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் & கண்ணிநுண் சிறுத்தாம்பு.
|
இரண்டாமாயிரம் | பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் & திருநெடுந்தாண்டகம்
|
மூன்றாமாயிரம் (இயற்பா) | முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருகை, சிறிய திருமடல், பெரிய திருமடல் மற்றும் இராமானுச நூற்றந்தாதி.
|
நான்காமாயிரம் | திருவாய்மொழி
|
ஆழ்வார்கள் அவதரித்த மாதம், நக்ஷத்திரம், இடம் மற்றும் அவர்கள் அருளிச்செய்துள்ள திவ்யப் பிரபந்தங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை.
ஆழ்வார் திருநாமம் (பெயர்) |
அவதரித்த (பிறந்த) மாதம், நட்சத்திரம், ஊர் |
அருளிச்செய்த பிரபந்தத்தின் பெயர் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை
|
பொய்கை ஆழ்வார்
| ஐப்பசி - திருவோணம் - திருக்கச்சி (காஞ்சிபுரம்) | முதல் திருவந்தாதி (100 பாடல்கள்)
|
பூதத்தாழ்வார்
| ஐப்பசி - அவிட்டம் – திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்) | இரண்டாம் திருவந்தாதி (100)
|
பேயாழ்வார்
| ஐப்பசி – சதயம் - திருமயிலை (மைலாப்பூர்) | மூன்றாம் திருவந்தாதி (100)
|
திருமழிசை ஆழ்வார்
| தை - மகம் - திருமழிசை | நான்முகன் திருவந்தாதி (96) & திருச்சந்தவிருத்தம் (120) |
நம்மாழ்வார்
| வைகாசி - விசாகம் - திருக்குருகூர் | திருவிருத்தம் (100), திருவாசிரியம் (7), பெரிய திருவந்தாதி (87) & திருவாய்மொழி (1102) |
குலசேகர ஆழ்வார் ) | மாசி - புனர்பூசம் - திருவஞ்சிக்களம் (கேரள மாநிலம் | பெருமாள் திருமொழி (105) |
பெரியாழ்வார்
| ஆனி - சுவாதி - ஸ்ரீவில்லிபுத்தூர் | திருப்பல்லாண்டு (12) & பெரியாழ்வார் திருமொழி (461) |
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
| மார்கழி – கேட்டை - திருமண்டங்குடி | திருமாலை (45) & திருப்பள்ளியெழுச்சி (10)
|
திருப்பாணாழ்வார்
| கார்த்திகை – ரோகிணி - திரு உறையூர் | அமலனாதிபிரான் (10)
|
திருமங்கை ஆழ்வார்
| கார்த்திகை - கார்த்திகை (கிருத்திகை) - திருக்குறையலூர் | பெரிய திருமொழி (1084) திருக்குறுந்தாண்டகம் (20), திருநெடுந்தாண்டகம் (30), திருவெழுக்கூற்றிருகை (1), சிறிய திருமடல் (1), பெரிய திருமடல் (1). |
ஸ்ரீ ஆண்டாள்
| ஆடி - பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் | திருப்பாவை (30) & நாச்சியார் திருமொழி (143) |
மதுரகவி ஆழ்வார்
| சித்திரை - சித்திரை - திருக்கோளூர் | கண்ணிநுண் சிறுத்தாம்பு (11) |
"ஆழ்வார்கள் மற்றும் அவர்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களின் புகழ் பேசும் பாடல்கள்"
ஆழ்வார்களைப் பற்றியும் அவர்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களைப் பற்றியும், ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் என்னும் ஆசாரியர் , தன்னுடைய உபதேச இரத்தினமாலை என்னும் பிரபந்தத்தில், மிகவும் எளிமையாகவும், அழகாகவும் பாடியுள்ளார். ஆழ்வார்களைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள இந்தப் பிரபந்தத்தைக் கைவிளக்காகக் கொள்ளலாம். அவற்றில் சில முக்கியப் பாடல்களை அறிவோம் :
“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உறைத்தவைகள்தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.” (பாசுரம் 3, உபதேசரத்தினமாலை)
விளக்கம் : ஆழ்வார்களுக்கும், வடமொழியில் (Sanskrit) அமைந்துள்ள நான்கு வேதங்களுக்கு நிகராய் அவர்கள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கும் பல்லாண்டு; (வாழி வாழி); தாழ்வு ஏதுமின்றி அவைகளை நன்கு கற்றுத் தேர்ந்த ஆச்சார்யர்கள் அனைவர்க்கும் பல்லாண்டு; ஏழுலகங்களிலும் வாழும் ஜீவாத்மாக்கள் அனைவரும் , பரமாத்மாவைப் பற்றி உணர்ந்து ஞான வைராக்யத்தைக் கிட்டும் வகையில் அமைந்துள்ள ஆழ்வார்களது திவ்யப் பிரபந்தகளும், அவைகளுக்கு,, ஆசார்யர்களால் விரித்துரைக்கப்பட்ட வியாக்யானங்களுக்கும் (explanations) பல்லாண்டு.
“அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த உலகில் இருள் நீங்க - வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாமறிய
ஈதென்று சொல்லுவோம் யாம்.” ((பாசுரம் 5, உபதேசரத்தினமாலை)
விளக்கம் : அழகான தமிழில் அமைந்துள்ள திவ்யப்ரபந்தங்களில் பரமாத்மாவின் விசேஷ குணங்களைப் பற்றி எடுத்துரைத்து, ஆழ்வார்கள் நம் அனைவருக்கும் அருள் புரிந்துள்ளனர். ஞானமே வடிவாய் அவதரித்த ஆழ்வார்களின் திவ்யப்ப்ரந்தங்கள், நம்முடைய மனதில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி ஞானத்தை அளிக்கும்.
Follow Us