மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 40
கர்ணன் தனது சந்தேகம் தீர பிராமண வேடம் அணிந்த அருஜூனனிடம் சென்று நம்மில் யார் வில்வித்தையில் சிறந்தவர் என்று நமது திறமையை வெளிப்படுத்தும் பாங்கில் போட்டி போடலாம் என்று கர்ணன் கூப்பிட்டான். பிராமண வாலிபனும் அதற்கு சம்மதித்தான். இருவரும் அவரவர் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதிவிரைவில் பிராமண வாலிபன் கர்ணனை விட வில்வித்தையில் சிறந்தவனாக தனது திறமையை காட்டினான். கர்ணன் பிராமண வாலிபன் வில்லித்தையில் சிறந்தவன் ஒத்துக்கொண்டு அர்ஜுனன் உயிரோடு இருந்தபோது அவன் கிட்டத்தட்ட என் தரத்தை ஒத்திருந்தான். இப்பொழுது பிராமணனாகிய நீயோ என்னை வென்று விட்டாய் பார்க்கவர் எனக்கு குரு ஆவார் உனக்கு குரு யார் என்று கேட்டான். அதற்கு பிராமண வேடத்தில் இருந்த அர்ஜூனன் என் குருவும் ஒரு பிராமணர் என்றான். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மன்னர்களுக்கு இடையில் ஓர் குழப்பம் உண்டாயிற்று.

துருபத மன்னனுடைய அரண்மனையில் சுயம்வரம் வெற்றிகரமாக நடந்து விட்டது. ஆனால் அங்கு வந்திருந்த வேந்தர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். அரசர்களிடம் க்ஷத்திரியன் பிராமணன் பற்றிய எண்ணமே அதற்குக் காரணமாய் இருந்தது. துருபதன் தன்னுடைய மகளை நாடோடி பிராமணன் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுத்து அதன் வாயிலாக நம்மை வேண்டுமென்றே இங்கு வரவழைத்து அவமானப்படுத்தியுள்ளார். பொருத்தமான ராஜகுமாரன் ஒருவன் கிடைக்கவில்லை என்றால் துரோபதி தற்கொலை செய்து கொள்வதே சரியானதாகும். நாடோடி ஒருவனுக்கு மாலை சூட்டியது பெரும் தவறாகும். துருபதன் ஆயுள்காலம் முழுவதும் மறக்க முடியாத பாடம் ஒன்றை அவனுக்கு புகட்டவேண்டும் என்று வேந்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி துருபத மன்னனை தாக்கத் துவங்கினர்.

இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது துருபதனுக்கு விளங்கவில்லை. பரிதாபத்துடன் நாலா பக்கமும் பார்த்தான். அதேவேளையில் சுயம்வரத்தில் வெற்றி அடைத்திருந்த பிராமண வாலிபன் கர்ணனிடம் பேச்சை நிறுத்திவிட்டு மாமனாரான துருபத மன்னனை காப்பாற்றும் பொருட்டு அங்கு விரைந்தான். மேலும் பிராமண வேடம் அணிந்த அவனது யுதிஷ்டிரன் தவிர்த்து மூன்று சகோதரர்களும் நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்ட துருபதன் மன்னனைக் காப்பாற்ற விரைந்தனர். பிராமணர் அபிமானத்தை முன்னிட்டு மேலும் பல பிராமணர்கள் அங்கு குவிந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்கும்படி பணிவுடன் பாண்டவர்கள் வேண்டிக் கொண்டனர். ஒரு சிறிய போர் போல மல்லுக்கட்டே நிகழ்ந்தது. அங்கு குழுமியிருந்த அரசர்கள் அனைவரையும் இந்த நான்கு பிராமணர்களும் வெற்றிகரமாக சமாளித்தனர். இந்த நால்வரும் யார் என்பது கிருஷ்ணனுக்கு தெரியும். ஆகையால் மகிழ்வுடன் அவன் அதை வேடிக்கைப் பார்த்தார். பிறகு மன்னர்களை சமாதானப்படுத்த கிருஷ்ணன் முயன்றார். அங்கு இருந்த அரசர்களிடம் இங்கு நிகழ்ந்ததில் குறை ஏதும் இல்லை. க்ஷத்திரிய ஐதிகத்துக்கு உட்பட்டே துருபதன் அனைத்தையும் செய்திருக்கின்றான். துருபதன் தவறு எதும் செய்யவில்லை என்று கிருஷ்ணன் தெளிவாக விளக்கினார். குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.