மகாபாரதம் | 18 சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -1
இந்திரனுடைய விமானத்தில் சொர்க்கத்திற்குள் சென்ற யுதிஷ்டிரன் அங்கு பெரும் கும்பலாக கூடி இருந்தவர்களில் தன் சகோதரர்களை தேடினான். சகோதரர்கள் யாரும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை. அங்கு இருந்தவர்களில் அவனுடைய கவனத்தில் தெரிந்தவன் துரியோதனன். இது யுதிஷ்டிரனுக்கு சிறிது மனகலக்கத்தை உண்டு பண்ணியது. தன் குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் பேராசை பிடித்தவன். தர்மத்திலிருந்து பெரிதும் பிசகியவன். யுத்த நெறியிலிருந்து பிசகிய பொல்லாதவன். அவன் புரிந்த பெரும் பாவச் செயல்களுக்கு மன்னிப்பு ஏதுமில்லை. யுத்தகுற்றவாளி என துரியோதனனே நரகத்தில் போட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அவன் இந்திரனுக்கு நிகரான பதவியை அங்கு பெற்றிருந்தான். அவனுடைய உள்ளத்தில் உதித்த அந்த எண்ணத்தை நாரதர் அறிந்து கொண்டார். உடனே யுதிஷ்டிரனிடம் சென்ற நாரதர் துரியோதனன் அடைந்திருப்பது வீர சொர்க்கம் என்று விளக்கம் கொடுத்தார். போர்க்களத்தில் மனம் தளராமல் போர்புரிந்து உடலை விடுவது க்ஷத்திரியர்களுக்கு உண்டான தகுதி எனவே துரியோதனனுக்கு சொர்க்கம் வாய்த்தது என்று விளக்கினார்.

யுதிஷ்டிரன் துரியோதனனை பற்றிய ஆராய்ச்சி எதையும் செய்யவில்லை. தன் சகோதரர்களை காண ஆவல் கொண்டிருந்தார். சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் என்று இந்திரனிடம் கேட்டுக்கொண்டான். அவர்கள் இருந்த இடத்திற்கு யுதிஷ்டிரனை அழைத்துச்செல்ல தேவதூதன் ஒருவன் அவனுடன் அனுப்பப்பட்டான். இவரும் நடந்து செல்ல செல்ல பாதை மேலும் மேலும் இருள் சூழ்ந்ததாக மாறியது. சூழ்நிலை அருவறுப்புக்குப்புக்கு உரியதாக இருந்தது. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. மலம் நிறைந்ததாக அந்த இடம் அமைந்திருந்தது. நிலத்தில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. தாங்க முடியாதவாறு அனல் காற்று வீசியது. தரையில் முட்கள் கிடந்தன. தனக்கு சிறிதும் பொருத்தமற்ற இந்த இடத்தைப் பற்றிய விவரங்களை தன்னுடன் வந்த தேவதூதனிடம் கேட்டான். அது நரகத்தின் ஒரு பகுதி என்றும் இனி தாங்கள் திரும்பிப் போகலாம் என்றும் உடன் வந்தவன் விளக்கினான்.
மகாபாரதம் | 18 சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -1
யுதிஷ்டிரன் அங்கிருந்து செல்ல திரும்பியதும் பரிதாபகரமான கூக்குரல்கள் கிளம்பின. திரும்பி போக வேண்டாமென்றும் மிகவும் புண்ணியவானான நீங்கள் வந்ததினால் தாங்கள் பட்ட வேதனை சிறிது தணிந்தது ஆகவே செல்லாதீர்கள் என்று மீண்டும் விண்ணப்பங்கள் செய்தனர். அன்னவர்கள் மீது கருணை கொண்ட யுதிஷ்டிரன் நின்றபடி அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களை பார்த்தான். அங்க விண்ணப்பித்தவர்கள் பீஷ்மர் கர்ணன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் திரௌபதி ஆகியோர் இருந்தனர். அவர்களை கண்டதும் யுதிஷ்டிரன் ஸ்தப்பித்து போனான். மீண்டும் சரியான மனநிலைக்கு வர அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதன் பிறகு உடன் தேவதூதுவனிடம் யுதிஷ்டிரன் உறுதியாகக் கூறினான் தேவலோகத்துக்கு அதிபதியாய் இருக்கும் இந்திரனிடம் நீ போய் நான் சொல்லும் செய்தியை கூறுவாயாக. பொல்லாங்கே வடிவெடுத்து இருக்கும் துரியோதனன் இருக்கும் சொர்க்க வாழ்க்கையை தனக்கு வேண்டாம் என்றும் அறநெறி சிறிதேனும் பிறழாத என் சகோதரர்கள் இங்கே நரக வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். சொர்க்கத்தில் இது தான் நீதி என்றால் நானும் என் தம்பிமார்களோடு இந்த நரகத்திலேயே மூழ்கி கிடப்பேன் என்று கூறினார்.