மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 17
சகுனி அவர்களே காலடியில் சரணமாய் வந்தவர்களுக்கு அனுகூலம் செய்ய வேண்டியது கடமையாகிரது. என்னால் முடிந்த வரை நிச்சயம் அதைச் செய்வேன். தவிர காக்கும் தெய்வங்களை வேண்டி வேண்டியதைச் செய்வேன். இது நிச்சயம். இப்போது பகடை எண்ணிக்கையை தாங்கள் கேட்கிறீர்களா அல்லது நான் கேட்கட்டுமா என்று கூறி இடது பக்கமாக காயை சுற்றி வருகிறாள். பலமுறை இடமாக வந்த திரௌபதி கிருஷ்ணரை நினைத்து பல வருடங்களாக விமோசனம் வேண்டி நிற்பவர்கள் சார்பில் கேட்கிறேன் விமோசனம் தரும் புண்ணிய பலத்தை எனக்குத் தாருங்கள் எனக் கூறிக் கொண்டே தன் இடது காலை எடுத்து பகடைகள் மேல் கூப்பிய கரங்களுடன் வைக்கிறாள். அந்த சில நொடிகளில் அவையில் ஒரே வெப்பம் எதோ எரிவது போல் அனைவரும் உணர்கின்றனர். திரௌபதி தனது காலை பகடை காய்களை விட்டு எடுக்கிறாள். அவை சற்று வெளுத்து வெண்சாம்பல் நிறத்தில் தெரிகின்றன. பகடையில் இருக்கும் சக்தி கிருஷ்ணன் அருளாள் எரிந்துவிட்டது.

மெதுவாக இடது கால் விரல்களால் எடுத்து வலது பாதத்தின் மேல் வைத்து சகுனியைப் பார்த்து என் வெற்றிக்கான எண்ணிக்கை ஐந்து. தங்கள் எண்ணிக்கை என்ன? எனக் கேட்கிறாள். என் எண்ணிக்கை ஒன்று என்று சகுனி கூறுகின்றான். நல்லது நான் முதல் ஆட்டத்தில் ஒன்றைக் கேட்டேன். யுதிஷ்டிரர் ஒருவரை அடைந்தேன். இந்த முறை நால்வருக்காக நான்கு என்று கேட்கலாம். ஆனால் என் கணவர்கள் ஐவரும் சமம் என்று எல்லோரும் அறிந்து கொள்வதற்காக ஐந்து என்று கேட்கிறேன். திரௌபதி காயை முன்னும் பின்னும் ஆட்டி பகடைக் காயை சொக்கட்டான் விரிப்பின் நடுவில் போடுகிறாள்.

தனது முன்னோர்களது எலும்பில் செய்த பகடையில் இருக்கும் சக்தியை திரௌபதி எரித்து விட்டாள். இந்த கலக்கத்தில் இருந்த சகுனி சற்றும் தாமதியாது பகடை ஐந்து துரியோதனா என்று கூறி இரு கைகளாலும் நான்கு முனைகளையும் பற்றி காயை மூடி எடுத்துக் கொண்டு சபையை விட்டு வெளியேறி பகடையில் சக்தியாய் இருந்த தன் முன்னோர்கள் அஸ்தியை கரைக்க நதிக்கரைக்கு சென்று விட்டான். சபையில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. விதுரர் மட்டும் நடந்ததை எதிர்பார்த்தவர் போல் உடன் எழுந்து மன்னர் திருதராஷ்டிரரிடம் நடந்ததை விளக்கி நால்வரும் சுதந்திரமானவர்கள் என்று அறிவித்து பாண்டவர் நால்வரையும் அவர்கள் ஆசனத்திற்கு அழைத்து வந்து அமர வைக்கிறார்.

திரௌபதி அனைவரையும் பார்த்து சபையோர்களே கேளுங்கள் இந்த துச்சாதனன் என் கூந்தலை பிடித்து சற்றும் யோசியாது இழுத்தானோ அந்த கைகள் சகதியில் இற்று விழ நான் பார்க்க வேண்டும். எந்த துரியோதனன் தன் துடைகளை தானே தட்டிக் கொண்டு அரச அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை இச்சபையில் பேசினானோ அந்த துடைகளை முறித்து கூழாக்கி அதை என் விரிந்த கூந்தலுக்கு நறுமண சாந்தாகப் பூசவேண்டும். இது திரோபதியின் சபதம் என்றாள்.