மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 4
ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் முதல் மரியாதைக்கு ஏற்றவர் யார் என்னும் வினா எழுந்தது. பாட்டனாராகிய பீஷ்மரும் பாண்டவர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். வந்திருந்தவர்களில் கிருஷ்ணனை தலை சிறந்தவன். கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய தெளிவான முடிவு. அதன்படியே சகோதரர்கள் மிக இறைவனாகிய சகாதேவன் கிருஷ்ணனுக்கு பாத பூஜை செய்து பிறகு புஷ்பங்களை கொண்டு வழிபாடு செலுத்தினான்.

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிசுபாலன் என்பவன் எழுந்து நின்றான். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைப் பார்த்து உரத்த குரலில் கடகடவென்று சிரித்தான். அடுத்தபடியாக பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் பொருந்தாத பொன் மொழிகள் பேசி அவமானப்படுத்தினான். அதன் பிறகு கிருஷ்ணனையும் ஆடு மேய்ப்பவன் என்று கூறி அவமானப்படுத்தினான். தெய்வ பொலிவுடன் இருந்த இடம் திடீரென்று கீழ்நிலைக்கு மாறியது குறித்து யுதிஷ்டிரன் திகைத்துப் போனான். பீமன் கோபாவேசத்துடன் குமுரிக் கொண்டிருந்தான் சகாதேவனுடைய கண்கள் செக்கசெவேல் என்று நிறம் மாறின. அவரவர் பாங்குக்கு ஏற்ப அவையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு விதங்களில் மனம் குழப்பினர். ஆனால் பீஷ்மர் கிருஷ்ணர் இருவர் மட்டும் எக்காரணத்தை முன்னிட்டும் குழப்பம் இல்லாத சாந்தமூர்த்திகளாக அமர்ந்திருந்தனர்.

சிசுபாலன் பேசுவதை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான். அனைவரையும் அவமானப்படுத்தி கொண்டே இருந்தான். பொருந்தாத பொருந்தாத சொற்களைக் கூறி கிருஷ்ணனையும் பாண்டவர்களையும் அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான். அடுத்தபடியாக ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு சபையை விட்டு வெளியேறினான். அவனுடைய செயலுக்கு உடந்தையாய் இருந்த வேறு சில வேந்தர்களும் அவனோடு வெளியேறினர். வெளியே நின்று கொண்டு சிசுபாலன் கிருஷ்ணனுக்கு சிறிதாளவாவது ஆண்மையை இருந்தால் அவன் என்னோடு சண்டைக்கு வரட்டும் என்று அறைகூவினான்.

கிருஷ்ணர் சபையில் எழுந்து நின்று அனைவரையும் பார்த்து இந்த ராஜசூய யாக்ஞம் இனிதே நிறைவேற வேண்டும் என்று நான் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் இந்த சிசுபாலன் என்னை அவமானபடுத்துகின்றான். அவன் என் மீது சொல்லும் நூறு அவமானங்களை சகித்துக் கொண்டு இருப்பேன் என்று அவனுடைய அன்னைக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது அவமானத்தின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் சென்று விட்டது. மேலும் அவனோடு நான் சண்டையிட வேண்டும் என்று அழைக்கின்றான். அவனோடு சண்டையிடப் போகிறேன் என்று கிருஷ்ணன் சிசுபாலனின் நோக்கி சென்றார்.