கேள்வி – மனிதன் மேலோன் ஆவது எப்போது?
யுதிஷ்டிரன் பதில் – தவத்தின் வாயிலாக மனிதன் மேலோன் ஆகிறான்
கேள்வி – மனிதன் எப்போது புத்திமான் ஆகின்றான்?
யுதிஷ்டிரன் பதில் – ஏட்டுக்கல்வியினால் மனிதன் புத்திமான் ஆவதில்லை. சான்றோர் இணக்கத்தினாலே மனிதன் புத்திமான் ஆகின்றான்.
கேள்வி – பிராமணன் யார்?
யுதிஷ்டிரன் பதில் – எல்லோருடைய நலத்தின் பொருட்டு தன்னை ஒப்படைப்பவன் பிராமணன் ஆகிறான்.
கேள்வி – க்ஷத்திரன் யார்?
யுதிஷ்டிரன் பதில் – தர்மத்தை காக்கும் பொருட்டு தன் உயிரைக் கொடுப்பவன் க்ஷத்திரியன் ஆகின்றான்.
கேள்வி – வேகம் வாய்ந்தது எது
யுதிஷ்டிரன் பதில் – மனம்.
கேள்வி – பயணம் போகிறவர்களுக்கு மிக மேலான கூட்டாளி யார்?
யுதிஷ்டிரன் பதில் – கல்வி
கேள்வி – எதை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்?
யுதிஷ்டிரன் பதில் – ஆசையை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்.
கேள்வி – அமைதி எங்கு உள்ளது?
யுதிஷ்டிரன் பதில் – மனத்திருப்தியில்.
கேள்வி – அதிசயங்களுள் அதிசயம் எது?
யுதிஷ்டிரன் பதில் – கணக்கற்ற பேர் இடைவிடாமல் இறந்து கொண்டே இருக்கின்றனர். அப்படி இருந்தும் உயிர்வாழ்ந்து இருப்பவன் தான் மரணம் அடையாமல் இருக்க போவதாக எண்ணிக் கொள்கிறான். இதுவே அதிசயங்களுள் அதிசயம்
இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் யுதிஷ்டிரர்.
Follow Us