மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 10
கனகனால் தூண்டப்பட்ட சமையல்காரன் வல்லாளன் விராட மன்னனை விடுவிக்க விரைந்து ஓடினான். மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு போனான். உனக்கு விருப்பமான போர் முறைகளை இங்கே கையாள வேண்டாம் ஏனென்றால் இன்னும் சில தினங்களுக்கு நாம் மறைந்திருக்க வேண்டும். சாதாரண போர் வீரர்கள் போன்று போர் செய்வாயாக என்று வல்லாளனுக்கு கனகன் எச்சரிக்கை பண்ணினார். கனகனின் ஆணைப்படியே நடந்து கொண்டா வல்லாளன் சுதர்மனை தோற்கடித்து விராட மன்னனை விடுவித்தான். அதோடு சுதர்மனின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டு தன்னுடைய ரதத்திலே வைத்து அவனைக் கொண்டு போனான். எதிரியின் படை தோல்வியுற்றது. தன்னை காப்பாற்றிய புதிய போர் வீரர்களுக்கு விராட மன்னன் நன்றி மிக செலுத்தினான். அவர்கள் அடைந்த வெற்றி நகரத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. மிக மகிழ்வுடன் இச்செய்தியை கேட்ட நகர மக்கள் தங்களுடைய நகரை நன்கு அலங்கரித்து தங்களுடைய பெரும் பாராட்டுகளோடு அவர்கள் வரவேற்றனர்.

விராட நாட்டின் வடக்கு திசையில் துரியோதனன் படை எடுத்து வந்து அங்கிருக்கும் மாட்டுப் பண்ணையில் பசுக்களை எல்லாம் அஸ்தினாபுரம் ஓட்டிச்சென்றான். அப்பண்ணையை நிர்வாகித்து வந்தவர்கள் ஆதரவற்றவர்களாயினர். துரியோதனன் பசுக்களை கொள்ளையடித்ததை தெரிவிப்பதற்கு விராட மன்னனுடைய சபா மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சபாமண்டபம் காலியாக கிடந்தது. அதன் பிறகு அவர்கள் நாட்டிய மண்டபத்திற்கு ஓடினார்கள். அங்கு இளவரசன் உத்தரன் வீணை வாசித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். அரசாங்கத்துக்கு உரிய கால்நடைகளை துரியோதனன் அபகரித்துக் கொண்டு செல்கின்றான் என்று தெரிவித்தார்கள். உத்தரனுக்கு அதைப்பற்றி கவலை உண்டாயிற்று. போரில் வெற்றி பெருவதற்கு சாரதி மிகவும் முக்கியம் என்றும் தனக்கு சரியான தேர் ஓட்டும் சாரதி ஒருவன் கிடைத்தால் அர்ஜுனனுக்கு நிகராக போர்புரிய முடியும் என்று அவன் பெருமை பேசினான்.

விராட நாட்டின் வடக்கு திசையில் துரியோதனன் படை எடுத்து வந்து அங்கிருக்கும் மாட்டுப் பண்ணையில் பசுக்களை எல்லாம் அஸ்தினாபுரம் ஓட்டிச்சென்றான். அப்பண்ணையை நிர்வாகித்து வந்தவர்கள் ஆதரவற்றவர்களாயினர். துரியோதனன் பசுக்களை கொள்ளையடித்ததை தெரிவிப்பதற்கு விராட மன்னனுடைய சபா மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சபாமண்டபம் காலியாக கிடந்தது. அதன் பிறகு அவர்கள் நாட்டிய மண்டபத்திற்கு ஓடினார்கள். அங்கு இளவரசன் உத்தரன் வீணை வாசித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். அரசாங்கத்துக்கு உரிய கால்நடைகளை துரியோதனன் அபகரித்துக் கொண்டு செல்கின்றான் என்று தெரிவித்தார்கள். உத்தரனுக்கு அதைப்பற்றி கவலை உண்டாயிற்று. போரில் வெற்றி பெருவதற்கு சாரதி மிகவும் முக்கியம் என்றும் தனக்கு சரியான தேர் ஓட்டும் சாரதி ஒருவன் கிடைத்தால் அர்ஜுனனுக்கு நிகராக போர்புரிய முடியும் என்று அவன் பெருமை பேசினான்.